தூரிகையும் வெண்கட்டியும்
கதைபேசிக் கொண்டிருந்தன
வெண்கட்டி மட்டும் தேய்ந்து........
கொண்டிருந்தது..........
என்றாலும் அதன் துகள்கள் மட்டுமே
இறுதிவரை ஒட்டிக்கிடந்தன...
கரும்பலகையில்.................
நமது இருப்பிடங்களின்
இடைவெளி வேண்டுமானால் தூரமாகலாம்
உன் நினைவுகள் மட்டும்
என்னைவிட்டுத் தூரமாவதே இல்லை...!
காதலிக்க தெரிந்த நமக்கு
காதலை பரிமாற்றிக் கொள்ளத்தான்
தெரியவில்லை..................!
வேண்டும்..! வேண்டாம்...!!
இந்த இரண்டில்தானே முடிகிறது வாழ்க்கை